திருக்குறள்

783.

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.

திருக்குறள் 783

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்:

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

மு.வரததாசனார் உரை:

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.