திருக்குறள்

786.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு.

திருக்குறள் 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு.

பொருள்:

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

மு.வரததாசனார் உரை:

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.