திருக்குறள்

1011.

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற.

திருக்குறள் 1011

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற.

பொருள்:

ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

மு.வரததாசனார் உரை:

தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

சாலமன் பாப்பையா உரை:

இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.