திருக்குறள்

1013.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும் நன்மை குறித்தது சால்பு.

திருக்குறள் 1013

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும் நன்மை குறித்தது சால்பு.

பொருள்:

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

மு.வரததாசனார் உரை:

எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா உரை:

எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.