திருக்குறள்

975.

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல்.

திருக்குறள் 975

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல்.

பொருள்:

அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.

மு.வரததாசனார் உரை:

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:

எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.