திருக்குறள்

980.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

திருக்குறள் 980

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

பொருள்:

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.

மு.வரததாசனார் உரை:

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.