திருக்குறள்

535.

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும்.

திருக்குறள் 535

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும்.

பொருள்:

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

மு.வரததாசனார் உரை:

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

சாலமன் பாப்பையா உரை:

துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.