திருக்குறள்

537.

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின்.

திருக்குறள் 537

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின்.

பொருள்:

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

மு.வரததாசனார் உரை:

மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.