திருக்குறள்

942.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணின்.

திருக்குறள் 942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணின்.

பொருள்:

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

மு.வரததாசனார் உரை:

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.