திருக்குறள்

947.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.

திருக்குறள் 947

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.

பொருள்:

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.

மு.வரததாசனார் உரை:

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.