திருக்குறள்

480.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.

திருக்குறள் 480

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.

பொருள்:

தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.

மு.வரததாசனார் உரை:

தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:

பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.