Skip to content
224

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு.

குறள் 224

Innaadhu Irakkap Patudhal Irandhavar Inmukang Kaanum Alavu.

பொருள்

ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

English

The suppliants' cry for aid yields scant delight, Until you see his face with grateful gladness bright.

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்