திருக்குறள்

224.

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு.

திருக்குறள் 224

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு.

பொருள்:

ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

மு.வரததாசனார் உரை:

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.