திருக்குறள்

229.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்.

திருக்குறள் 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்.

பொருள்:

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

மு.வரததாசனார் உரை:

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.