திருக்குறள்

1061.

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.

திருக்குறள் 1061

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.

பொருள்:

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.

மு.வரததாசனார் உரை:

உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.