Skip to content
1066

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில்.

குறள் 1066

Aavirku Neerendru Irappinum Naavirku Iravin Ilivandha Thil.

பொருள்

தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

English

E'en if a draught of water for a cow you ask, Nought's so distasteful to the tongue as beggar's task.

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்