திருக்குறள்

1066.

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில்.

திருக்குறள் 1066

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில்.

பொருள்:

தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

மு.வரததாசனார் உரை:

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.