Skip to content
405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.

குறள் 405

Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu Sollaatach Chorvu Patum.

பொருள்

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

English

As worthless shows the worth of man unlearned, When council meets, by words he speaks discerned.

கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

51 The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்