திருக்குறள்

410.

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.

திருக்குறள் 410

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.

பொருள்:

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

மு.வரததாசனார் உரை:

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

சாலமன் பாப்பையா உரை:

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.