திருக்குறள்

934.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்.

திருக்குறள் 934

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்.

பொருள்:

பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.

மு.வரததாசனார் உரை:

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.