திருக்குறள்

939.

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் அடையாவாம் ஆயங் கொளின்.

திருக்குறள் 939

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் அடையாவாம் ஆயங் கொளின்.

பொருள்:

சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.

மு.வரததாசனார் உரை:

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

சாலமன் பாப்பையா உரை:

சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.