திருக்குறள்

938.

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத் தல்லல் உழப்பிக்கும் சூது.

திருக்குறள் 938

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத் தல்லல் உழப்பிக்கும் சூது.

பொருள்:

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.

மு.வரததாசனார் உரை:

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை:

சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.