திருக்குறள்

831.

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்.

திருக்குறள் 831

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்.

பொருள்:

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

மு.வரததாசனார் உரை:

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.