திருக்குறள்

832.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல்.

திருக்குறள் 832

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல்.

பொருள்:

தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.

மு.வரததாசனார் உரை:

ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.