திருக்குறள்

836.

பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.

திருக்குறள் 836

பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.

பொருள்:

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

மு.வரததாசனார் உரை:

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

சாலமன் பாப்பையா உரை:

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.