திருக்குறள்

283.

களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும்.

திருக்குறள் 283

களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும்.

பொருள்:

கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

மு.வரததாசனார் உரை:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.