திருக்குறள்

284.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும்.

திருக்குறள் 284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும்.

பொருள்:

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

மு.வரததாசனார் உரை:

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.