திருக்குறள்

289.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.

திருக்குறள் 289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.

பொருள்:

அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

மு.வரததாசனார் உரை:

களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.