திருக்குறள்

286.

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.

திருக்குறள் 286

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.

பொருள்:

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.

மு.வரததாசனார் உரை:

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.