திருக்குறள்

302.

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற.

திருக்குறள் 302

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற.

பொருள்:

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

மு.வரததாசனார் உரை:

பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.