திருக்குறள்

304.

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற.

திருக்குறள் 304

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற.

பொருள்:

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

மு.வரததாசனார் உரை:

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.

சாலமன் பாப்பையா உரை:

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.