திருக்குறள்

310.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.

திருக்குறள் 310

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.

பொருள்:

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

மு.வரததாசனார் உரை:

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை:

பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.