திருக்குறள்

303.

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்.

திருக்குறள் 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்.

பொருள்:

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

மு.வரததாசனார் உரை:

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை:

தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.