Skip to content
846

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.

குறள் 846

Atram Maraiththalo Pullarivu Thamvayin Kutram Maraiyaa Vazhi.

பொருள்

நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.

English

Fools are they who their nakedness conceal, And yet their faults unveiled reveal.

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்