திருக்குறள்

850.

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்.

திருக்குறள் 850

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்.

பொருள்:

ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:

இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.