திருக்குறள்

846.

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.

திருக்குறள் 846

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.

பொருள்:

நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.

மு.வரததாசனார் உரை:

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.