திருக்குறள்

841.

அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.

திருக்குறள் 841

அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.

பொருள்:

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.

மு.வரததாசனார் உரை:

அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

சாலமன் பாப்பையா உரை:

இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.