திருக்குறள்

847.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.

திருக்குறள் 847

அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.

பொருள்:

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.

மு.வரததாசனார் உரை:

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

சாலமன் பாப்பையா உரை:

அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.