திருக்குறள்

484.

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.

திருக்குறள் 484

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.

பொருள்:

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

மு.வரததாசனார் உரை:

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா உரை:

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.