திருக்குறள்

489.

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.

திருக்குறள் 489

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.

பொருள்:

கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.