திருக்குறள்

488.

செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை காணிற் கிழக்காந் தலை.

திருக்குறள் 488

செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை காணிற் கிழக்காந் தலை.

பொருள்:

பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

சாலமன் பாப்பையா உரை:

பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.