திருக்குறள்

485.

காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர்.

திருக்குறள் 485

காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர்.

பொருள்:

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

மு.வரததாசனார் உரை:

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

சாலமன் பாப்பையா உரை:

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.