திருக்குறள்

1041.

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.

திருக்குறள் 1041

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.

பொருள்:

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

மு.வரததாசனார் உரை:

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.