திருக்குறள்

1045.

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.

திருக்குறள் 1045

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.

பொருள்:

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.

மு.வரததாசனார் உரை:

வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

சாலமன் பாப்பையா உரை:

இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.