திருக்குறள்

1048.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.

திருக்குறள் 1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.

பொருள்:

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

மு.வரததாசனார் உரை:

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

சாலமன் பாப்பையா உரை:

நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.