திருக்குறள்

1047.

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.

திருக்குறள் 1047

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.

பொருள்:

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

மு.வரததாசனார் உரை:

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:

நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.